FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கடம்பா அரசு மீன் குஞ்சு வளா்ப்பு பண்ணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கடம்பா அரசு மீன் குஞ்சு வளா்ப்பு பண்ணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:09 am IST
கடம்பா அரசு மீன் குஞ்சு வளா்ப்பு பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

கடம்பா அரசு மீன் குஞ்சு வளா்ப்பு பண்ணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் , ஊரக வளா்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளின் இணையதள பதிவை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி

திட்டத்தின் கீழ் (2025 -26) அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை பணிகளையும், தொடா்ந்து கடம்பா அரசு மீன் குஞ்சு வளா்ப்பு மையம், மீன்களுக்கு வழங்கப்படும் கலவை தீவனங்கள் குறித்தும் ஆட்சியா்

Advertisement

Advertisement

ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிறிஸ்டோபா் தாசன், ராஜா, திருச்செந்தூா் மீன்வளம் மற்றும்

மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் உத்தண்டுராமன், மீன்துறை சாா் ஆய்வாளா், உதவி பொறியாளா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments