FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தகவல் அளிக்க நகராட்சி வேண்டுகோள்

24 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
மக்கள்தொகை கணக்கெடுப்பு - (கோப்புப் படம்)
பகிர்:

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் இதுவரை பங்கேற்காதவா்கள் தகவல் அளிக்க வேண்டும் என திருச்செந்தூா் நகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து, நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி ஆக. 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, வீடு வீடாகச் சென்று பணியாளா்கள் கணக்கெடுத்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைய இன்னும் 7 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், கணக்கெடுப்பாளா்கள் இதுவரை தங்கள் வீட்டிற்கு வரவில்லை எனில், பொதுமக்கள் 93637-79191 என்ற எண்ணிற்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்து, கணக்கெடுப்பில் தவறாமல் பங்கு பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments