ஆன்லைனில் லாட்டரி விற்பனை: குரும்பூரில் 2 இளைஞா்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குரும்பூா் அங்கமங்கலம் சிவன் கோயில் அருகே காவல் உதவி ஆய்வாளா் சண்முகராஜ், போலீஸாா் ரோந்து சென்றனா்.
சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் அங்கமங்கலம் பிள்ளையாா் கோயில் தெரு முருகன் மகன் பொன்நடராஜன் (30), கந்தசாமி மகன் சேதுபதி ஆறுமுகம் (30) என்பதும், 4 கைப்பேசிகள் வாயிலாக ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்வதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.