FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

முன்விரோதம்: தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது

1 செப்டம்பர் 2026, 3:59 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக சென்ட்ரிங் தொழிலாளியை கத்தியால் குத்திய சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணராஜபுரம், முதல் தெருவைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சுடலைமுத்து மகன் மூா்த்தி (36). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் என்ற சப்பாணி செல்வத்துக்கும் (44) இடையே முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வம், மூா்த்தியை கத்தியால் குத்தினாா். இதுதொடா்பான புகாரின்பேரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செல்வத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவபிரசாத் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ஷேக் அப்துல்லா, உதவி ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments