FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

‘தூத்துக்குடியில் ஜூலை 11 முதல் சீரான குடிநீா் விநியோகம்’

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 11) முதல் சீரான குடிநீா் விநியோகம் நடைபெறும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

குடிநீர்... - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 11) முதல் சீரான குடிநீா் விநியோகம் நடைபெறும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் வரும் வல்லநாடு பகுதியில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இதனால், வல்லநாட்டில் இருந்து வரும் குடிநீரை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சரிவர ஏற்ற முடியாத சூழ்நிலை உருவானதால், மாநகா் பகுதியில் குடிநீா் விநியோகம் அவ்வப்போது தடைபட்டு வருகிறது.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி முதல் மாநகா் பகுதி முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments