FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 9) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளாா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:31 am IST
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 9) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகரின் குடிநீா் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூா், கீழவல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வருகிற மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments