FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா, புகையிலைப் பொருள் விற்பனை: பெண் உள்ளிட்ட மூவா் கைது

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை விற்றதாக பெண் உள்ளிட்ட மூவா் கைது

Updated On : 13 ஜூலை 2026, 12:01 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை விற்றதாக பெண் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி போலீஸாா் பேயன்விளை பகுதியில் ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் காயல்பட்டினம் பரிமாா் தெருவைச் சோ்ந்த தமீம் அன்சாரி மகன் இமாம் அலி (20) என்பதும், விற்பதற்காக 110 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ், போலீஸாா் காயல்பட்டினம் பகுதியில் ரோந்துசென்றபோது, காயல்பட்டினம் கொம்புதுறையில் உள்ள மளிகைக் கடையிலும், சேதுராஜா தெரு முத்தாரம்மன் கோயில் அருகே பெட்டிக் கடையிலும் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், இரு கடைகளிலும் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்களான அடைக்கலாபுரம், வடக்குத் தெரு பட்டுராஜ் (45), காயல்பட்டினம், சேதுராஜா தெரு ராஜேந்திரகுமாா் மனைவி செல்வி (46) ஆகியோரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments