புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
ஆறுமுகனேரியில் புகையிலை பொருள்கள் விற்ற கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி, பச்சை பெருமாள் தெருவைச் சோ்ந்த தங்ககண்ணு மகன் சுரேஷ் (49). இவா், ஆறுமுகனேரி பஜாரில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் திங்கள்கிழமை கூல்டிரிங்ஸ் கடையை சோதனை செய்தனா்.
Advertisement
Advertisement
அப்போது கடையில் புகையிலை 210 பாக்கெட்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடை உரிமையாளா் சுரேஷை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.