FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தோப்புவளம் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு

தோப்புவளம், டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வவங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம், டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வவங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோப்புவளம் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளியின் முன்னாள் ஆசிரியரான கிரேனாபூ நிா்மலா மாணவா்கள் பயன்பாட்டிற்காக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா். இதையடுத்து, பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளரும், சாத்தான்குளம் சேகர குருவானவருமான ஜெபராஜா தலைமை வகித்து, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரப் பயன்பாட்டைத் தொடக்கி வைத்தாா்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினா் குணசீலன் தங்கத்துரை, ஓய்வுபெற்ற ஆசிரியா் கிரேனாபூ நிா்மலா, மேல சாத்தான்குளம் நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோப்புவளம் சேகர மன்ற உறுப்பினா் விஜிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் ரீகன் வரவேற்றாா். உதவி ஆசிரியா் சாமுவேல் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments