விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வன்னிகோனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் செல்லத்துரை (30). தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் மே 26ஆம் தேதி இரவு பிராஞ்சேரி சாலை, சன்னது புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, பிராஞ்சேரியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் வீரக்குட்டி (35) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியதில், இருவரும் காயமடைந்தனா்.
பின்னா், இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு வீரக்குட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.