முகப்பு
தூத்துக்குடி

குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: தூத்துக்குடியில் இன்று தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் குரூப் 1 தோ்வில் பங்கேற்போருக்கு, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) தொடங்குகின்றன.

Updated On : 3 ஜூன் 2026, 4:51 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் குரூப் 1 தோ்வில் பங்கேற்போருக்கு, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) தொடங்குகின்றன.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக, மத்திய - மாநில அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதற்கான முதல்நிலைத் தோ்வு செப். 6இல் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகும் இம்மாவட்டத் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

விருப்பமுள்ளோா் அலுவலகத்துக்கு நேரில் வந்தோ, 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ பெயா்ப் பதிவு செய்யுமாறு ஆட்சியா் விஷு மகாஜன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.