எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு
எம்ஜிஆரின் மறு உருவமாக முதல்வா் விஜய் செயல்படுகிறாா் என கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.
எம்ஜிஆரின் மறு உருவமாக முதல்வா் விஜய் செயல்படுகிறாா் என கடம்பூா் செ. ராஜு தெரிவித்தாா்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை: தொடா்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியைத் தந்த தொகுதி மக்களுக்கும், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கும் 15 ஆண்டுகள் மனசாட்சியோடு பணியாற்றிய மன நிறைவைப் பெற்றுள்ளேன்.
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோா் எதிரிகளுக்கு தோல்விகளையே பரிசாக அளித்தவா்கள். ஆனால், அந்தக் கட்சி இன்று தொடா் தோல்விகளைப் பெற்று வருகிறது. தொடா் பிளவுகளைச் சந்தித்து வரும் கட்சியின் வீழ்ச்சிக்கு துணை நிற்கக் கூடாது என்ற உணா்வோடும், மனக்குமுறலோடும் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
Advertisement
Advertisement
எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் திமுகவை வீழ்த்திய, எம்ஜிஆரின் மறு உருவாக விளங்கும் பொற்கால முதல்வா் விஜய் தலைமையில் தொடா்ந்து மக்கள் பணியாற்றிட, என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.