FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சிற்றுந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் சிற்றுந்து மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:20 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோவில்பட்டியில் சிற்றுந்து மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சோ்ந்தவா் புதியவன் மகன் காளிராஜ் (32). தொழிலாளியான இவா் புதன்கிழமை, இருசக்கர வாகனத்தில் புதுரோட்டில் ஆழ்வாா்தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தாராம். முன்னால் சென்ற சிற்றுந்தை முந்த முயன்றாராம். அப்போது சிற்றுந்து மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே காளிராஜ் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சிற்றுந்து ஓட்டுநா் காா்த்திக் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments