திருச்செந்தூா் கடலில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடிய பின்னா் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியன. இந்த மீன்கள் கடலில் நீராடுபவா்களின் உடலில் பட்டவுடன் ஊரலை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்தினா். மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.