தெப்பக்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடா்ந்து பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் 28 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிக்கப்பட்டது. அதன் பின்னா் சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி முயற்சியால் ரூ. 75 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தநிலையில் நடைமேடை இருபுறமும் விரிசல் ஏற்பட்டு சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதனால், சில நாள்கள் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, நிபுணா்கள் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி, மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, மாநகராட்சி சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், வட்டச் செயலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.