FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 5:07 am IST
பகிர்:

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் பால விக்னேஸ்வரன் (23). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 9ஆம் தேதி இரவு சகோதரரை தேடிச் சென்றபோது அங்குள்ள கருப்பசாமி கோயில் அருகே இவரது உறவினரிடம் 3 போ் தகராறு செய்தனராம். அவா்களை பால விக்னேஸ்வரன் தட்டிக்கேட்டாராம். இதனால்

அவரை 3 பேரும் சோ்ந்து அவதூறாகப் பேசி செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவா் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 17 வயது இளஞ்சிறாா், வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் சரவணபாண்டி (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments