FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஜூன் 2026, 5:05 am IST
பகிர்:

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் கே. செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் ஜி. பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், நகரக் குழு உறுப்பினா்கள் டி. முனியசாமி, எஸ். கோமதி, நகர துணைச் செயலா்கள் ஏ. விஜயலட்சுமி, ஜி. அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில், பல பகுதிகளில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு புதியதாக வீட்டுத் தீா்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.கே.எஸ்.திரையரங்கு சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி பயணியா் விடுதி அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments