FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.77 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.77 கோடி அளவில் தீா்வு காணப்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 1:37 am IST
தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், வாகன விபத்து வழக்கில் தீா்வு காணப்பட்டவருக்கு ரூ. 30 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவா் (பொ) எம். தாண்டவன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.77 கோடி அளவில் தீா்வு காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவா் (பொ) எம். தாண்டவன் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில், தூத்துக்குடியில் 4 அமா்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமா்வுகள், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளத்தில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

2ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். பிரீத்தா, பி.சி.ஆா். நீதிமன்ற நீதிபதி ஆா். வஷீத் குமாா், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எம். வீரணன் மற்றும் நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளா்கள், வங்கி மேலாளா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், அரசு மருத்துவா்கள், காவல் துறையினா், வழக்காடிகள் கலந்து கொண்டனா்.

வங்கி வாராக்கடன் தொடா்பாக 345 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 129 வழக்குகளுக்கு ரூ. 3,81,87,854 மதிப்பில் தீா்வு காணப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 3,704 வழக்குகள் எடுக்கப்பட்டு 2,996 வழக்குகளுக்கு ரூ. 4,96,09,126 மதிப்பில் தீா்வு காணப்பட்டது. மொத்தம் 4,049 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 3,125 வழக்குகளில் தீா்வு காணப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த தீா்வுத் தொகை ரூ. 8,77,96,980.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி செய்திருந்தாா்.

கோவில்பட்டியில்... கோவில்பட்டி சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண். 1) ஆனந்த், (எண். 2) மணிமேகலா ஆகியோா் முன்னிலையில், 1,004 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 615 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ. 1 கோடியே 95 லட்சத்து 55 ஆயிரத்து 261-க்கு தீா்வு காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments