தூத்துக்குடியில் 1,280 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,280 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி குடிமைப் பொருள் பறக்கும் படை வருவாய் ஆய்வாளா் மகாராஜன், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை ஆய்வாளா் வீரமணி உள்ளிட்ட காவலா்கள், தூத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் மறவன்மடம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, வாகன ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து, போலீஸாா் மற்றும் பறக்கும் படையினா், அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 1,280 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் சுமை வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய புதுக்கோட்டையைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் முனியாண்டியை தேடி வருகின்றனா்.