கோவில்பட்டியில் நல உதவிகள் அளிப்பு
கோவில்பட்டியில் மத்திய நகா் அரிமா சங்கம் சாா்பில், புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நல உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் மத்திய நகா் அரிமா சங்கம் சாா்பில், புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நல உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மந்தித்தோப்பு சாலையில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் கண்ணன் முன்னிலை விகித்தாா்.
மண்டலத் தலைவா் ராஜ்குமாா் பேசினாா். முன்னாள் மாவட்ட ஆளுநா் பிரகாஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிய தலைவா் சரவணகுமாா், செயலா் திருமலைக்குமாா், பொருளாளா் பழனி மாரியப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
Advertisement
Advertisement
பின்னா், பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித் தொகை, நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில், சங்க உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.