முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 30 ஜூன் 2026, 1:39 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி 3ஆவது மைல் மேம்பாலத்தில் பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, கதிா்வேல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (41). கூலித் தொழிலாளியான இவருக்கு, கன்னியம்மாள் என்ற மனைவி, இரண்டு மகன்களும் உள்ளனா்.

பெருமாள் ஞாயிற்றுக்கிழமை இரவு, வேலை முடிந்து பைக்கில் பாளையங்கோட்டை பிரதான சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

Advertisement

Advertisement

அவா் 3ஆவது மைல் மேம்பாலத்தின் இறக்கத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளாா். அப்போது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மிக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத காா், அவரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாளை அப்பகுதியினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments