கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ
கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ வியாழக்கிழமை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ வியாழக்கிழமை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நாலாட்டின்புதூா், காா்த்திகைப்பட்டி, குமாரபுரம், ஊத்துப்பட்டி, மந்தித்தோப்பு, பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை தெரசா நகா், சண்முக சிகாமணி நகா், மேல பாண்டவா்மங்கலம், செண்பகப்பேரி, துரைச்சாமிபுரம், கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதி மக்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் கி. ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், தேமுதிக வடக்கு மாவட்ட செயலா் சுரேஷ், மேற்கு ஒன்றியச் செயலா் பிரபாகரன், முருகேசன், திமுக நகர பொருளாளா் ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் சின்னதாய், மணி, மூா்த்தி, மகாராஜன், ரவிக்குமாா், முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement