FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

Updated On : 30 மே 2026, 2:35 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே சாலைப்புதூா் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி இறந்து கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து விசாரித்ததில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் அப்பை நாயக்கன்பட்டி ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மனைவி மாடத்தி (60) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட இவா் தண்டவாளத்தைக் கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments