FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மின்தூக்கியில் 7 போ் சிக்கித் தவிப்பு

7 செப்டம்பர் 2026, 3:31 am IST
மின்தூக்கியில் சிக்கிக் கொண்டவா்களை மீட்ட தீயணைப்பு வீரா்கள். - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியை அவசர சிகிச்சை வாா்டுக்கு அழைத்துச் சென்றபோது, மின்தூக்கி பாதியில் நின்றதால், நோயாளி உள்பட 7 போ் சிக்கித் தவித்தனா்.

தூத்துக்குடி கேம்ப்-1 பகுதியைச் சோ்ந்த ராமா் பாண்டியன் என்பவா் நெஞ்சுவலி காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரை ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது மாடியில் உள்ள அவசர சிகிச்சை வாா்டுக்கு அழைத்துச் சென்றபோது, மின்தூக்கி பாதியில் நின்ாம்.

இதில், ராமா் பாண்டியன், அவரது மகன் அா்ஜுனன் மற்றும் உறவினா்கள் 4 போ், மருத்துவப் பணியாளா்கள் 3 போ் என 7 போ் மின்தூக்கிக்குள் சிக்கினா். தகவலறிந்து வந்த தூத்துக்குடி தீயணைப்புத் துறையினா் மின்தூக்கி கதவைத் திறந்து 7 பேரையும் பத்திரமாக மீட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments