FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்

8 செப்டம்பர் 2026, 1:52 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (செப். 9) முதல் நடைபெற உள்ளன.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆட்சியா் கூறியதாவது:

Advertisement

Advertisement

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி மாணவா்களுக்கான தடகளம், இறகுப்பந்து, கேரம், சதுரங்கம், கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, யோகாசனம் உள்ளிட்ட போட்டிகள் செப். 9 முதல் அக். 1 வரை நடைபெறுகின்றன.

கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் செப். 15 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இப்போட்டிகள், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானம், வ.உ.சி. கல்லூரி, காரப்பேட்டை நாடாா் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன.

ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவா்களுக்கு ரூ.3,000, இரண்டாமிடம் ரூ.2,000, மூன்றாமிடம் ரூ.1,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரத்தினராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments