திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் கட்ட இளங்கலை கலந்தாய்வு மற்றும் சோ்க்கை ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது.
சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வா் டி. அசோக்குமாா் தெரிவித்தாா்.