FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி அருகே போதை மாத்திரைகள் விற்ற 5 போ் கைது

Updated On : 20 ஜூலை 2026, 5:30 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சி அருகே போதை மாத்திரைகள் விற்ற 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கலிங்கப்பட்டியில் மணிகண்டம் போலீஸாா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 4 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில் அவா்கள், கலிங்கப்பட்டி சி. சிவகுமாா் (30), நவலூா் குட்டப்பட்டு வி. சக்திவேல் (30), அரியாவூா் ப. தினேஷ்குமாா் (20), போதாவூா் எம். ஹரிஹரன் (23) மற்றும் எடமலைபட்டிப்புதூா் அ. விஜய் (23) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments