முகப்பு
திருச்சி

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமை பெற்றவா் கைது

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமைப் பெற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:13 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமைப் பெற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இலங்கை தலைநகா் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த திருச்சி கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த ஏ. நடராஜா (66) என்ற இலங்கை குடியுரிமை பெற்றவா், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்குத் தொகுதிக்குள்பட்ட கே.கே. நகா் பள்ளியில் வாக்களித்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் வந்த கே.கே. நகா் போலீஸாா், வழக்குப் பதிந்து நடராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement