போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
திருச்சியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
திருச்சியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், நாகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் இசைக்கலைஞா் பூபதி (20). இவருக்கும், எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்தச் சிறுமியை நாகமங்கலம் காட்டுப் பகுதிக்கு அண்மையில் அழைத்து சென்ற இளைஞா் அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அண்மையில் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை செய்த போலீஸாா் பூபதியை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement