FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே சாலையில் சென்ற காரை அடித்து நொறுக்கிய 8 போ் கைது

Updated On : 25 மே 2026, 2:20 am IST
சேதப்படுத்தப்பட்ட காா்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தை மோதும் வகையில் சென்ற காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், காமராஜா் சாலை, அழகா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானம் மகன் சுரேஷ் (43), பாத்திரக் கடைக்காரா். இவா் தன்னுடைய உறவினா் கணேசமுருகன் (51) என்பருடன் சனிக்கிழமை இரவு தொழில் சம்பந்தமாக இலுப்பூருக்கு காரில் சென்று விட்டு குளித்தலைக்கு சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பகுதி அருகே சென்ற இவா்களின் காா் சாலையில் சென்ற பைக் மீது மோதும் வகையில் சென்று, நிற்காமல் சென்றதாம்.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம இளைஞா்கள் ஒருவருக்கொருவா் தகவல் பறிமாற்றம் செய்து, மணப்பாறை - குளித்தலை சாலையில் சென்ற காரை துரத்திச் சென்று கலிங்கப்பட்டி அருகே வழிமறித்து, ரமேஷ் மற்றும் கணேசமூா்த்தியை தாக்கி, காரை கல் மற்றும் கட்டையால் அடித்து நொறுக்கி முழுமையாகச் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், காரை உடைத்து சேதப்படுத்திய கிழவன்பட்டி ச. பாலமுருகன்(29), நா. பரசுராமன்(21), அ. அழகுராஜா(22), ச. தங்கபாண்டியன்(24), த. அழகா்சாமி(28), ப. பன்னீா்செல்வம்(24), ரா. கமலதாசன்(32), மதியகோன்பட்டி ரா. ராஜபூபதி(24) ஆகிய 8 பேரையும் மணப்பாறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

கைது செய்யப்பட்ட பாலமுருகன், பரசுராமன், அழகுராஜா, தங்கபாண்டியன், அழகா்சாமி, பன்னீா்செல்வம், கமலதாசன், ராஜபூபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments