மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கியது பாரத ஸ்டேட் வங்கி
ஜயங்கொண்டம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் (ஆய்வு) மாருதி பிரகாஷ் பங்கேற்று, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை, மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாத்திமா மருத்துவமனைக்கு வீல் சேர் உள்ளிட்டவற்றை வழங்கினார். ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் வீரராகவன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க உள்கட்டமைப்பு உபகரணங்களை வழங்குமாறு துணை பொதுமேலாளரிடம் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.