FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மணல் கடத்திய 2 பேர் கைது

விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் கோவிந்தப்புத்தூர் குமணன் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம்(50), ஸ்ரீபுரந்தான் கல்லடித் தெருவைச் சேர்ந்த சாமிநாதன்(60) ஆகியோர் தங்களது மாட்டு வண்டிகளில் அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து போலீஸார் 2 பேரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments