மணல் கடத்திய 2 பேர் கைது
விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் கோவிந்தப்புத்தூர் குமணன் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம்(50), ஸ்ரீபுரந்தான் கல்லடித் தெருவைச் சேர்ந்த சாமிநாதன்(60) ஆகியோர் தங்களது மாட்டு வண்டிகளில் அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் 2 பேரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.