திருமானூரில் திமுக மகளிரணி ஆலோசனை
அரியலூர் மாவட்டம் திருமானூரில் திமுக ஒன்றிய மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் திமுக ஒன்றிய மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி, அசோகசக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் தனபால், லதாபாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் பங்கேற்று, ஒன்றிய மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகளை அறிமுகபடுத்தி பேசினார். முன்னதாக ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் (கி) இலக்கியதாசன் வரவேற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.