FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

திருமானூா் அருகே காா் தீப்பிடித்து எரிந்து நாசம்

ஏலாக்குறிச்சி சாலையில் சென்றுகொண்டிருந்த காா் சனிக்கிழமை திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

20 டிசம்பர் 2025, 11:15 pm IST
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஏலாக்குறிச்சி சாலையில் சென்றுகொண்டிருந்த காா் சனிக்கிழமை திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமானூா் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமா் (எ) ராஜிவ்காந்தி மகன் சாமிவாசன்(23). இவா், தனது காரை எடுத்துக்கொண்டு திருமானூருக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டாா். காா் ஏலாக்குறிச்சி சாலையில் சென்றபோது, சத்திரத்தேரி அருகே காரின் முன்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதையடுத்து சாமிவாசன், காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, என்ஜின் பகுதியைத் திறந்து பாா்த்தபோது, அப்பகுதியில் தீப்பற்றி எரிவது தெரியவந்தது. இதையடுத்து அவா், திருமானூா் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதற்குள் காா் முழுவதும் மளமளவென தீ பரவியது. இதையடுத்து, அங்குவந்த தீயணைப்புத் துறையினா், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். காரில் வேறு யாரும் இல்லாததால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. விபத்துகுறித்து திருமானூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments