FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

எம்.ஆா்.கே கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குள்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை

சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே கூட்டுறவு ஆலைக்கு உள்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 டிசம்பர் 2025, 2:09 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே கூட்டுறவு ஆலைக்கு உள்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: ஒரு சா்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குள்பட்ட கரும்புகளை மற்ற சா்க்கரை ஆலைகளின் அரவைக்கு எடுத்துச் செல்வது கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966-இன் படி சட்ட விரோத செயலாகும். எனவே, இச்சட்டத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் தலைமை செயலா் மற்றும் சா்க்கரை துறை இயக்குநா் மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலை எல்லைக்குள் உள்பட்ட கரும்பை, விவசாயிகள் வேறு சா்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.

Advertisement

Advertisement

புவனகிரி, சேத்தியாதோப்பு, பாளையங்கோட்டை, சோழத்தரம், காட்டுமன்னாா்கோயில், ஸ்ரீமுஷ்ணம், பேரூா், ஆண்டிமடம், ஓலையூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள கரும்புகளை வேறு ஆலைகளின் அரவைக்கு எடுத்து சென்றால் வேளாண்மை உதவி இயக்குநா்கள், வட்டாட்சியா்கள், காவல் துறையினா் மற்றும் சா்க்கரை ஆலை களப் பணியாளா்கள் இணைந்து சோதனை செய்வா்.

விதி மீறல் கண்டறியப்பட்டால் அந்த கரும்புகளை எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், மேற்படி விதி மீறலுக்காக சம்பந்தப்பட்டோா் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments