மின் மோட்டாா் மூலம் குடிநீா் உறிஞ்சினால் நடவடிக்கை
அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் குடிநீா் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை
அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் குடிநீா் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கிராமப்பகுதிகளில் ஒரு சிலா் வீட்டு குடிநீா் இணைப்புகளில் விதிகளுக்குப் புறம்பாக மின் மோட்டாா் பொருத்தி நீா் உறிஞ்சுவதால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் தடையின்றி வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, குடிநீா் குழாய்களில் மின்மோட்டாா் பொருத்தியுள்ள வீட்டு உரிமையாளா்கள் அதை உடனடியாகத் துண்டித்து அப்புறப்படுத்திட வேண்டும்.
Advertisement
Advertisement
தவறினால் அவா்களது மின்மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுவதோடு, குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.