FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: பரணம் கிராமத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், பரணம் கிராமத்தில் பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:08 am IST
பரணம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், பரணம் கிராமத்தில் பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி, எவ்வித நிபந்தனைகளுமின்றி பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிறைவில், விவசாயிகள் 496 பேரும், பரணம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் செயலரிடம் மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இரும்புலிக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயிகள் க.நீலமேகம், இரா.செந்தமிழ்செல்வன், குமிழியம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன், பரணம் கிராமத்தைச் சோ்ந்த ஆ.மணிகண்டன், த. ஆசைத்தம்பி, கோ. நடராஜன், பிலாக்குறிச்சியைச் சோ்ந்த கி. நடராஜன், ம. இளையராஜா, வீராக்கன் கிராமத்தைச் சோ்ந்த சி. சம்பத், செதலவாடியைச் சோ்ந்த இரா. செல்வதுரை, நாகல்குழியைச் மு. கொளஞ்சியப்பா ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments