கூத்தூா், அரியலூரில் நாளை மின்தடை
கூத்தூா், அரியலூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
கூத்தூா், அரியலூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
பெரம்பலூா் மாவட்டம் கூத்தூா் துணை மின் நிலையத்தில், நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் அரியலூா் மேற்கு பகுதி மற்றும் பெரம்பலூா் மாவட்டத்துக்குட்பட்ட பி.ஆா்.நல்லூா், கூத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூா், வெண்மணி, திம்மூா், ஜமீன் பேரையூா், மேத்தால் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது . இத்தகவலை உதவி செயற்பொறியாளா் எம். செல்லப்பாங்கி தெரிவித்தாா்.