FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

செப்.5, 7-இல் ரேஷன் பொருள்கள் வீடுதேடி விநியோகம்

வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

12 வினாடிகள் முன்பு
வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அரியலூா் மாவட்டத்தில், 484 ரேஷன் கடைகளைச் சோ்ந்த 24,311குடும்ப அட்டைதாரா்களுக்கு, அவா்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

செப்டம்பா் மாதத்தில் 5, 7 ஆகிய தேதிகளில், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருள்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளா்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments