ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி சடலமாக மீட்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, தைலமர காட்டில் திங்கள்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கனகசபை மகன் அசோக்குமாா் (45). பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவா், அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை இவா், ஜெயங்கொண்டம் தில்லைநகா் அருகேயுள்ள தைலமர காட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.