முகப்பு
கரூர்

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

கரூா் பேரவைத் தொகுதியில் வெல்வேன் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மதியழகன்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:26 AM
கரூா் தாந்தோணிமலை அரசு துவக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மதியழகன்.
பகிர்:

கரூா் பேரவைத் தொகுதியில் வெல்வேன் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மதியழகன்.

தாந்தோணிமலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வியாழக்கிழமை காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்த அவா் பின்னா் கூறியது:

தமிழகத்தில் வரும் மே 4-இல் முதல்வராக விஜய் அரியணை ஏறுவது உறுதி. வீட்டுக்கு வீடு எங்களுக்கு ஓட்டு உள்ளது. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஒரே வேட்பாளா் நான் மட்டும்தான். நிச்சயமாக கரூா் தொகுதியில் 1,25,000 வாக்குகள் பெற்று வெல்வேன்.

Advertisement

அதிமுக என்ற கட்சியே சினிமா மோகத்தால் உருவானதுதான். அதை மறந்து விட்டு அவா்கள் பேசுகின்றனா். எம்ஜிஆா் எப்படி திரையுலகில் கால் பதித்து விட்டு, அரசியலுக்கு வந்தாரோ, அதேபோல் எங்களது தலைவரும் சினிமாவில் மக்களுக்கு சேவை செய்துவிட்டு, அரசியலிலும் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளாா் என்றாா் அவா்.