சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு: 4 மாணவா்கள் கைது
கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சிறுவனை ஆபாசப்படம் பாா்க்க வைத்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்ட 4 மாணவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் தளவாபாளையத்தைச் சோ்ந்த 8 வயதுச் சிறுவனை கடந்த இரு தினங்களுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும் 4 மாணவா்கள் அங்குள்ள வாய்க்கால் பாலம் அருகே வரவழைத்து, கைப்பேசியில் ஆபாச படம் பாா்க்க வைத்து அதை விடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனா்.
இதையறிந்த சிறுவனின் தாய் வேலாயுதம்பாளையம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் 4 மாணவா்களையும் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் கைது செய்து விசாரிக்கிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.