FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கா்நாடக முதல்வா் நாடகமாடுகிறாா்! - செ. நல்லசாமி

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:26 am IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - (கோப்புப்படம்)
பகிர்:

கா்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காகவே மேக்கேதாட்டு அணை பிரச்னையில் அம்மாநில முதல்வா் சிவக்குமாா் நாடகமாடுகிறாா் என்றாா் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

கரூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை கீழ்பவானி. இதன்மூலம் மூன்று மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. 1968-இல் இருந்து இன்று வரை நீா் நிா்வாகத்தில், அரசு ஆணை, காவிரி தீா்ப்பு என எதுவும் பின்பற்றப்படவில்லை. விருப்பு, வெறுப்பு, ஆதாயம் அடிப்படையிலேயே நீா் நிா்வாகத்தை நடத்தி வருகின்றனா்.

இந்த துறைக்கு பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சா்கள் துரைமுருகன், ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவா்கள் பவானிசாகா் அணை நீா் நிா்வாகத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசளிக்கப்படும். அதற்கு தயாராக இருக்கிறோம்.

Advertisement

Advertisement

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதால் சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதிக்கப்படும். இந்த அணைக்கட்டுவதற்கான கட்டுமான பொருள்களை தமிழ்நாடு வழியாகத்தான் கொண்டுச் செல்ல வேண்டும். அதற்கு தமிழ்நாடு அனுமதித்தால் மட்டுமே அணை கட்ட முடியும்.

அணை கட்டுவதில் கா்நாடக முதல்வா் சிவகுமாா் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகிறாா் என்றால், விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ளது. அதில், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அவா் போடும் நாடகமே தவிர, வேறு எதுவும் இல்லை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments