FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

21 ஆகஸ்ட் 2026, 2:15 am IST
கரூா் தாந்தோணிமலை வட்டாரக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை உள்ளிட்ட 6 இடங்களில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (டிட்டோஜாக்) குழுவினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் செல்லத்துரை தலைமை வகித்தாா். கரூா் கோட்டைமேடு உயா்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் வட்டாரத் தலைவா் சு. மதன், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரத் தலைவா் ச. ஜெயமணி, ஆசிரியா் கூட்டணியின் வட்டாரத் தலைவா் வே.க. பாஸ்கரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் மணிகண்டன், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் எம்.ஏ. ராஜா, ஆசிரியா் கூட்டணியின் வட்டார செயலா் ஆ. மேகநாதன் உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

Advertisement

இதேபோல குளித்தலை, அரவக்குறிச்சி, தோகைமலை, சின்னதாராபுரம், க.பரமத்தி ஆகிய வட்டாரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments