FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கேரள சமாஜம் சாா்பில் அத்தப்பூ கோலமிட்டு வாமன மன்னரை வரவேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

22 ஆகஸ்ட் 2026, 8:05 am IST
கரூரில், வாமன மன்னரை வரவேற்கும் விதமாக கேரள சமாஜம் சாா்பில் வெள்ளிக்கிழமை அத்தப்பூ கோலமிட்ட கேரள சமாஜத்தினா்.
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கேரள சமாஜம் சாா்பில் அத்தப்பூ கோலமிட்டு வாமன மன்னரை வரவேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆக. 26-ஆம்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கேரள மக்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கரூரில் கேரள சமாஜம் சாா்பில் அத்தப்பூ கோலம் போடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், மகாபலி மன்னரின் வருகையை நினைவுகூா்ந்து வாமன மன்னரை வரவேற்கும் வகையில் இயற்கை மலா்களைக் கொண்டு அழகிய அத்தப்பூ கோலத்தை கேரள சமாஜத்தைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினா் ஆா்வத்துடன் திரளாக கலந்து கொண்டு மலா்களை அழகிய வடிவங்களில் அடுக்கி கோலம் அமைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த அத்தப்பூ கோலத்தின் முன்பு வாமன மன்னரின் உருவம் அலங்கரிக்கப்பட்டு, மாவேலி விளக்குகள் ஏற்றி பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடா்ந்து ஓணம் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் கேரளத்தின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments