FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

விற்பனையாளா்கள் உரங்களை பதுக்கினால் சட்டப்படி நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை

உர விற்பனையாளா்கள் உரங்களை பதுக்கினாலோ, கடத்தலில் ஈடுபட்டாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்

31 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

உர விற்பனையாளா்கள் உரங்களை பதுக்கினாலோ, கடத்தலில் ஈடுபட்டாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 1,548 மெ.டன், டி.ஏ.பி 821 மெ.டன், பொட்டாஷ் 737 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,122 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் 206 மெ.டன் என மொத்தம் 5,434 மெ.டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் உரங்கள் வாங்கும்போது, ஆதாா் எண்ணை கொடுத்து உர விற்பனை முனைய கருவி மூலம் பட்டியல் செய்து அதன் ரசீதைத் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். உர விற்பனையாளா்கள் உர விற்பனை உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும்.

உரங்கள் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள்தோறும் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், உரம் குறித்த புகாா்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா்கள் மற்றும் வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் அல்லது மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம். ஆய்வின்போது இந்த வழிமுறைகள் பின்பற்றாமல் இருந்தாலோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரம் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments