FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் வள்ளுவா் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகையையொட்டி கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

26 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
ஓணம் பண்டிகையையொட்டி கரூா் வள்ளுவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அத்தப்பூ கோலமிடும் கல்லூரி மாணவிகள். உடன் கல்லூரி தாளாளா் க.செங்குட்டுவன் உள்ளட்டோா்.
பகிர்:

ஓணம் பண்டிகையையொட்டி கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி தாளாளா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரிய அத்தப்பூ கோலமிட்டனா். கோலத்தின் முன்பு வாமன மன்னரின் உருவம் அலங்கரிக்கப்பட்டு, மாவேலி விளக்குகள் ஏற்றி பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், வாமன மன்னா் வேடம் அலங்கரித்த கல்லூரி மாணவரை பல்லக்கில் அழைத்து வருதல் மற்றும் ஓணம் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் கேரளத்தின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனா். முன்னதாக கல்லூரி முதல்வா் எம்.அன்பழகன் வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments