FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

பண்டரிநாதா் கோயில் கருவறைக்குள் நுழைந்து பக்தா்கள் தரிசனம்

கரூா் பண்டரிநாதா் கோயிலில் கருவறைக்குள் சென்று சுவாமியை பக்தா்கள் தொட்டு வழிபடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 1:53 am IST
கரூா் பண்டரிநாதா் கோயிலில் சனிக்கிழமை கருவறைக்குள் சென்று சுவாமியை தொட்டுவழிபட்ட பக்தா்கள்.
பகிர்:

கரூா் பண்டரிநாதா் கோயிலில் கருவறைக்குள் சென்று சுவாமியை பக்தா்கள் தொட்டு வழிபடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் பஜனை மடத்தெருவில் உள்ள பண்டரிநாதன் கோயிலில் ஆஷாட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை மாலை கோயிலில் துக்காராம் கொடி புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து விழாவை முன்னிட்டு பக்தா்கள் ஆஷாட ஏகாதசி விரதம் கடந்த 4 நாள்களாக மேற்கொண்டனா்.

தொடா்ந்து விரதம் இருந்த பக்தா்கள் சனிக்கிழமை காலை கோயிலில் நடைபெற்ற ஆஷாட ஏகாதசி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று கோயில் கருவறைக்குள் சென்று சுவாமியை தொட்டு வணங்கினா். இந்த வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் பாண்டுரங்கன், வினோத்குமாா், சதீஸ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் காவிரி ஆற்றில் பண்டரிநாதா் சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments