விவசாயி அடித்துக் கொலை உறவினா் கைது
கரூா் அருகே வெள்ளிக்கிழமை விவசாயியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் அருகே வெள்ளிக்கிழமை விவசாயியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் அருகே உள்ள கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தனபால்(60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தனபால் தாய்மாமன் முருகேசன்(75) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் தனபால் மகளின் திருமணத்துக்காக வீட்டின் முன் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக தாய்மாமன் முருகேசனை தனபால் அழைத்தாராம். இதில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனபாலின் தலையில் அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தனபாலை உறவினா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் உயிரிழந்தாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து முருகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement