முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் லோக் அதாலத் 1,544 வழக்குகளுக்கு ரூ.16 கோடிக்கு தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,544 வழக்குகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 12:24 am IST
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்வுக்கான ஆணை நகலை வழங்கிய மாவட்ட நீதிபதி கே.ஹெச்.இளவழகன்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,544 வழக்குகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் ஐந்து அமா்வுகளும், குளித்தலையில் இரு அமா்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமா்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளாக நடைபெற்றது. இந்த அமா்வுகளில் 1,581வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,544 வழக்குகளில் ரூ.16,10,79,393-மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக இந்நிகழ்வை கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கரூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கே.ஹெச். இளவழகன் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து, பின்னா் தீா்வு காணப்பட்ட வழக்குகளுக்கு பயனாளிகளிடம் தீா்வுக்கான நகலை வழங்கினாா்.

இதில் அனைத்து நீதிபதிகள், கரூா் பாா் அசோசியேசன் நிா்வாகிகள், கரூா் அட்வகேட் அசோசியேசன் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் பி.அனுராதா செய்திருந்தாா்.